If you have any feedback on how we can make our new website better please do contact us and we would like to hear from you.
 

இப்பக்கத்தில் மரண அறிவித்தல்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாதனை மற்றும் அறிவியல் சார்ந்த விடயங்கள் இடம் பெறும். 

candilதிரு பொன்னம்பலம் நடராஜா அவர்களின் மரண அறிவித்தல்

திரு பொன்னம்பலம் நடராஜா

(கள்ளியடி இலுப்பக்கடவை முத்துமாரியமன்னர் கோவில் பூசகர்)

இறப்பு : 27 மே 2010

கள்ளியடி இலுப்பக்கடவை மன்னாரை பிறப்பிடமாகவும், வசிப்பிட மாகவும் கொண்ட பொன்னம்பலம் நடராஜா அவர்கள் 27.05.2010 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், இளையபிள்ளை அவர்களின் மகனும், சிவகாம வல்லியின் அன்புக் கணவரும், சபாரத்தினம், ராசமணி, அன்ன லக்ஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரரும், சிதம்பரவல்லி (இலங்கை), மகேஸ்வரி(இலங்கை), சந்திரசேகரம்பிள்ளை(இலங்கை), கனகரத்தினம்(இலண்டன்), சிவபாதம்(இலண்டன்), இராசலிங்கம் (இலண்டன்), கமலாவதி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தை யும்,மார்க்கஇலங்கை), லீலா(இலண்டன்), கிருபா(இலண்டன்), ண்டு(இலங்கை), பொன்னுத்துரை(இலங்கை), களவள்ளீ(இலண்டன்), ஜோசப்(இலங்கை) ஆகியோரின் மாமனாரும்,வள்ளி தேவராணி மனோ

(நோர்வே), காலஞ்சென்ற அமலசிங்கம், மல்லிகா(ஜேர்மனி), கோமதி(இலண்டன்), விஜயா(இலங்கை), பாமா(இலங்கை), வசந்தி(இலண்டன்), வசந்தன்(சுவிஸ்), சாந்தன்(கனடா), சிவா(இலங்கை), காலஞ்சென்ற பாஸ்கரன், சிறி(பிரான்ஸ்), ஜனா(இலங்கை), லதா(இலண்டன்), தீபா(இலண்டன்), சர்மிளா(இலண்டன்), சியாமிளா(இலண்டன்), திஸா(இலண்டன்), ஸ்ரெல்லா(இலங்கை), ரஜனி(இலங்கை), அமலி(இலங்கை), சகா(இலங்கை), மிசேன்(இலங்கை), விதுஷன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும்,

துளசி, சுருதி, அனுசிஆரணிஆர்த்தி, சயன்லதீஸ், தயந்தினி, சப்திகாசூரியாயினிசுமித்திராயாயினி, சதுஷன், தனுஷன், நிதர்ஷன், அஸ்மிதா, றம்ஸன், ரன்சிகாரித்தீஸ், சுஜீவன், ரஜீவன், அஸ்வின், அஸானா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 27.05.2010 வியாழக்கிழமை அன்று மன்னார்

இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்

குடும்பத்தினர்

 

தொடர்புகளுக்கு

கனகரத்தினம் நடராஜா(மகன்) பிரித்தானியா

தொலைபேசி:

+441604589775

செல்லிடப்பேசி:

+447506460572

மன்னாருக்கு பெருமை சேர்க்கும் வெண்ணிலாmoon

செல்வி வெண்ணிலா சூசையப்பு நோர்வே நாட்டில் வசித்து வரும் இவர் திரு ஹெக்டர் சூசையப்பு (பொறியியளார் அரிப்பு மன்னார்.) திருமதி அக்னஸ் பாலசிங்கம்(யாழ்.நாவாந்துறை) இவர்களின் புதல்வியா வார். இவர் தனது ஆரம்ப பள்ளிவாழ்க்கை தொட்டு Drill எனப்படும் உடல்பயிற்ச்சி விளயாட்டில் ஆர்வமிக் கவராக காணப்பட்டார். இவரது ஆர்வத்தை அவரது பெற்றோர்கள் தடைசெய்யவில்லை. வெண்ணிலா ஆர பத்தில் தனது பாடசாலையில் வெற்றிபெற்று பின்னர் மாநில அளவுக்கு உயர்ந்து பின்னர் நோர்வே நாட்டில் முன்னனி விற்பனராக திகழ்ந்தார். ஐரோப்பிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் நோர்வே சார்பாக இவர் பல போட்டிக்ளில் ஈடுபட்டு வெற்றிபெற்றுள்ளார்.Belgium, Amstradam, Malta போன்ற ஐரோப்பிய நகரங்களில் நடைபெற்ற அனைத்துப் போட்டிகளி்லும் கலந்துகொண் டு நோர்வே நாட்டுக்கும் நம் தமிழர்களுக்கும் பெருமை தேடிக்கொண்டார். உலகளாவிய போட்டிகளில் கலந்து கொள்ள தயாராகிவரும் பதினெட்டு வயது நிரம்பிய வெண்ணிலாவுக்கும் அவரது பெற்றோருக்கும் மன்னார் மக்களின் மனம் நிறைந்த வாழ்த்துக்களை இணைத்த தளம் ஊடக தெரிவிக்கின்றோம். இவரது போட்டி நிகழ் ச்சியை இங்கே காணலாம்இங்கே அமிழ்த்துக!

 

நீங்கள் திக்குவாய் உள்ளவரா? கவலைவேண்டாம் மாற்றுவதற்கு சில வழிமுறைகள்

திக்குவாய் ஏற்படுவதன் காரணம். இடக்கைப் பழக்கத்தை வலக்கைப்பக்கமாக மாற்றும் போது, திக்குவாய் ஏற்படுகின்றது.

நுரையீரலில் இருந்து வெளிப்படும் காற்றினால் குரல்வளை அசைந்து ஒலியை உண்டாக்குகின்றது. இது குரலாகத் தொண்டை, வாய், மூக்கு, நாக்கு ஆகியவற்றைக் கடந்து மேல் நோக்கி வரும் போது இவ்வுறுப்புகளின் அசைவுகளினால் வார்த்தையாக வாயின் வழி வெளிப்படும். இந்த வெளிப்பாட்டில் தங்கு தடை ஏற்படும் போது திக்குவாய் ஏற்படுகின்றது.

பொதுவாக திக்குவாய் குழந்தைகளுக்கும், சிறியவர்களுக்கும் வருகிறது. சிலருக்கு பிறவியிலேயே திக்குவாய் அமையலாம். சிலருக்கு இடையிலேயும் திக்குவாய் வரக்கூடும். இடக்கைப் பழக்கம் உள்ளவர்களுக்கு இது அதிகமாக வருகிறது.

இடக்கைப் பழக்கத்தை வலக்கைப்பக்கமாக மாற்றும் போது, திக்குவாய் ஏற்படுகின்றது.

திக்குவாய் என்பது பேச்சில் ஏற்படும் ஒரு தடங்கல் ஆகும். பேசிக்கொண்டிருக்கும் போது பேச்சு நின்று விடலாம். அல்லது ஒழுங்காக ஏற்படும் பேச்சுத் திக்கித் திணறலாம்; இவ்வாறு ஏற்படும் பேச்சுத் திணறல் பலவிதமாக வெளிப்படலாம்.

இவ்வாறு திக்குவாய் ஏற்படுவதற்கான காரணங்கள்:

மூளையின் ஒரு பகுதி உடலை இயக்குகின்றது. மறு பகுதியும், தன் வேலையை நிறுத்தாமல் இயங்குவதால் வார்த்தை தடுமாற்றம் ஏற்படுகின்றது. ஒரே குடும்பத்தில் பலருக்கு திக்குவாய் வருவதுண்டு. பொதுவாக குழந்தைகளுக்கு வார்த்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக புதிதாக வரும் போது திக்குகிறது. படிப்பறிவு இல்லாதவர்களுக்கு மனதில் தடுமாற்றம் இருக்குமானால் வாய் திக்கும். அதே போல சூழ்நிலைகளைப் பொறுத்தும் ஏற்படலாம்;.

திக்குவாயைக் குணப்படுத்துவதற்கு:

நோயாளியை துணிவுள்ளவர்களாக மாற்றவேண்டும். தாழ்வு மனப்பான்மையை முற்றிலும் மாற்றவேண்டும். நோயாளி திக்காமல் ஒன்றுக்கு இரண்டு முறையாகப் பேசிப் பழக வேண்டும். பேசும் போது உடலை இலகுவாக்கிக் கொள்ளவேண்டும். மூச்சுப்பயிற்சி செய்து பழகவேண்டும். கண்ணாடிமுன் நின்று பேசி அங்க அசைவுகளைக் கட்டுப்படுத்துதல்.
அதே போல மருத்துவர்களின் முறையிலும் திக்குவாயை நிவர்த்தி செய்யலாம்.

நன்றி: மருத்துவ அறிவியல் மலர்.

  தயவுசெய்து இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்தோட்டம் தேவை! நன்றி உங்கள் பேசாலைதாஸ்    

கச்சை தீவு யார்வசம் இருப்பது 

    மன்னார் மக்களுக்கு நல்லது?

சீனாவிடமா? இந்தியாவிடமா? இலங்கையிடமா?

உங்கள் கருத்துகளை எமக்கு எழுதுக!    


வன்னி மாவட்டத்தில் வெற்றி பெற்றவர்கள் பெற்ற வாக்குகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு
செல்வம் அடைக்கலநாதன் - 17 366
எஸ். நோகராத லிங்கம்  - 12 120
சிவசக்தி ஆனந்தன் - 11 674

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
றிசாட் பதியுதீன் - 27 461
உநாயிஸ் பாருக் - 10 851

ஐக்கிய தேசியக் கட்சி
நூர்தீன் மசூர் - 9518






Political PartyVotes
Ilankai Tamil Arasu Kadchi ITAK15,02653.30%
United People's Freedom AllianceUPFA7,43126.36%
United National FrontUNF3,12511.09%
Democratic National AllianceDNA150.05%
All other PartiesOther2,5949.20%
Total Polled30,35935.58%
Rejected2,1687.14%
Total Valid28,19192.86%
Total Registered85,322
































































































































.



























































































































 
 
 
  Site Map